வருண பேதத்தை பரப்புவதே கீதை: கருணாநிதி
சென்னை:
வருண பேதத்தை பரப்புவதே பகவத் கீதை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் சமத்துவ முழக்கத்தை ஏற்ராத நூல் ஒன்று உண்டு. அது தான்பகவத் கீதை.
ஒருவன், தன் வருணத்துக்குரிய தொழிலைச் செய்வதே இனியது. நானே இந்த நால்வகை வருணங்களையும்உருவாக்கியவன் ஆவேன். என்று கிருஷ்ணன் உபதேசிப்பது தான் கீதை.
எனவே பகவத் கீதையை ஏற்றுக் கொண்டால், வருண பேதங்களையும், பிராமண, ஷத்ரிய, வைசிய, சூத்திர என்றசதுர் வர்ணங்களையும் ஏற்றுக் கொள்வதாகவே பொருள்.
சிறப்புகள் வேறுபடலாமே தவிர, பிறப்பு காரணமாக மனிதர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது, கூடாது என்றுசொல்வதே திருக்குறள்.
ஆக, கீதை என்று ஒரு நூல் இருக்கலாம். ஆனால், அது எமக்குரியதல்ல. அதில் கூறப்படும் அறிவுரைகளும் யாம்கடைபிடிப்பதற்கு ஏற்றதல்ல.
அந்த நூல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், பெரியார்-அண்ணா வழி வந்தவர்கள் திருக்குறளையேபின்பற்றினால் யாருக்கு நஷ்டம்? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
அண்ணல் அம்பேத்கர் கீதையைப் பற்றி சொன்னதில் சில துளிகளைத் தான் எடுத்துக் காட்டினேன்? ஏன் சிலருக்குகோபம் வருகிறது?.
கீதையை பரப்புவோர் மீது பெரியார் மிகக் கடுமையான விமர்சனம் தொடுத்தார். நான் அந்த அளவுக்குக் கூடபோகவில்லை. கீதையைப் பரப்புவது பச்சை அயோக்கியத்தனம் என்றார் பெரியார். நான் அந்த அளவுக்கு கடும்தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனாலும் என் மீது பாய்கிறார்கள் சிலர். என் உருவ பொம்மையைகொளுத்துகிறார்கள்.
மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில கும்பல்களின் மதியூக தந்திரம் தான் இது என்பது தமிழ்நெஞ்சங்களுக்குத் தெரியும்.
உருவ பொம்மையை கொளுத்தினாலும் கொள்கையில் மாற மாட்டேன். என்றோ ஒரு நாள் இந்த உடலேஎரியுண்டோ, புதையுண்டோ போகப் போவது தானே?
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.